இது என்னவோ

ஒரு பெண் ருதுவானால் செய்யப்படும் விழாவாம் இந்த விழா. 

வீட்டில் உள்ள பெரியோர்கள் தன் வீட்டில் உள்ள பெண் ருதுவாகிவிட்டால் என்று ஊரை கூட்டி வைக்கப்படும் விழாவாம் இது.

இதனால் அந்த பெண்ணுக்கு ஏதேனும் நன்மை நடக்க இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த விழாவால் அந்த பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படும். வாலிப வயது நபர்கள் அந்த பெண்ணை வட்டமிடுவார்கள். இதனால் சம்பந்தபட்ட பெண்ணின் பெற்றோர்கள் மனம் சஞ்சலம் அடையும். இது தான் இந்த விழாவால் நிகழக்கூடிய மிகப்பெரிய நன்மை என்று ஒரு பெரியவர் கூற கேட்டேன்.

அதனால் எனது அச்சகத்தில் இந்த புனித நீராட்டு விழா பத்திரிகை அடிக்க வந்த ஒருவரிடம் அந்த பெரியவர் சொன்னதை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவர் நான் பேசிய பேச்சில் பத்திரிகை அடிக்காமலேயே சென்று விட்டார். சரி இவரை நாம் பேசியே சரிசெய்துவிட்டோம். என்று ராஜதந்திரங்களை கரைத்து குடித்தவனடா நீ என்று எனக்கு நானே சபாஷ் சொன்ன போது தான் தெரிந்தது. அவர் எனக்கு அருகில் உள்ள அச்சகத்தில் இந்த பத்திரிகையை அடித்துக்கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக