கொல்லி மலையில் இருக்கும் இந்த தெய்வம் தான் கொல்லி பாவை.

அசுரர்களை தன் வசிய பார்வையால் கவர்ந்து கொல்லும் என்ற பொய்யை இன்னமும் பரப்பி வருகிறார்கள். அது போல இதுவரை யாரையும் கொன்றதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.

புராண, இதிகாசங்களில் தென்னாட்டவரை அசுரனாகவும், வடநாட்டவரை தேவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது தென்னாட்டில் இருக்கும் நம்மை எப்படி பாவை அழித்திருக்கமுடியும்.

சித்தர்களுக்கு வரங்களை வழங்கும் இந்த தெய்வம். இன்னமும் பல சித்தர்களுக்கு வரம் வழங்கிகொண்டு தான் இருக்கிறது.

சித்தர்களா அதுவும் இந்த காலத்திலா என்று நீங்கள் கேட்கலாம், ஆம் இருக்கிறார்கள், ஜீன்ஸ் டீசர்ட் போட் சித்தர்கள் நம்மிடம் கலந்து தான் இருக்கிறார்கள்.

இனம் காண்பதில் தான் இருக்கிறது.