சாதி என்ற ஒன்றை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும் என்று சொன்ன இந்த திராவிட நாட்டில்

சாதிவாரி கணக்கெடு்ப்பும் மற்றும் அதற்குண்டான சாதிகட்சிகள்,
சாதி அமைப்புகளின் விளம்பரம் தீவிரமாக நடந்துக்டிகொண்டு தான் இருக்கிறது.

முதலில் நாண்கு சாதியாக இருந்தது இன்று நாற்பதாயிரம் சாதிகளாக பிரிந்துள்ளது.

இப்படியே போனால் நாகபதனியா, நாகப்பதனியா என்று 23ஆம் புலிகேசி கதை நடந்தேறும் என்பதில் ஐயம் இல்லை.
இதனை அரசு வேறு ஊக்குவிக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பதால் என்ன பயன்,

இதன்மூலம் அரசியல்வாதிகள் குறிப்பிட்ட சாதிக்கு அதாவது அதிகப்படியாக உள்ள சாதிக்கு சலுகைகள் கொடுத்து ஓட்டுபிச்சை வாங்கலாம் இது தான் லாபம்.

சாதி ஒழிப்பு போராட்டம் நடத்திய நம் தமிழ்நாட்டு காரர்களே இதற்கு உட்தையாக இருப்பது அபத்தம் தான்.