படிப்பதற்கு முக்கிய தேவை

நமது நாடு ஒரு ஜனநாயக நாடு என்பதில் நாம் பெருமைபட தான் வேண்டும்.

ஆனால் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுடன் மிக அடிப்படை தேவையான கல்வி சரியாக கிடைக்கிறதா என்பது இன்றைக்கு கேள்ளிகுறி தான்.

பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்காமல், எடுக்கமுடியாமல் ( பல சந்தர்ப சூழல்களால்) குறைந்த மதிப்பெண் எடுத்து விரும்பிய துறை கிடைக்காமல் பல மாணவர்கள் மனதாங்களுடன் படிக்கிறார்கள்.

ஒன்று மதிப்பெண் இருக்க வேண்டும் அல்லது பணம் இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லாதவர் பாடு திண்டாட்டம் தான்

அதிக மதிப்பெண் எடுக்க எனக்கு தெரிந்த புரோட்டா மாஸ்டர் கிடைத்த நேரத்தில் ராப்பகலா கண்விழித்து படித்து நோய் வந்தது தான் மிச்சம்.

ஆக அவர் அதிக மதிப்பெண்னும் எடுக்கவில்லை, மேற்கொண்டு படிக்க பணமும் இல்லை.

இந்த தொல்லைக்கு படிக்காமலே புரோட்டா போட்டு நன்கு சம்பாதித்திருக்கலாம். அவர்.

குறைந்த மதிப்பெண் எடுத்தால் அவனுக்கு உள்ள திறமைக்கு ஏற்றாற்போல் படிக்கமுடியாத சூழல் தான் நிலவுகிறது.

பணம் இருந்தால் படிக்கலாம் என்பது இன்று சொல்லாமல் சொல்லப்படுகிறது.

இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய. மெட்ரிக்குலேசன் போன்ற தனியார் பள்ளி, கல்லூரி வைத்திருப்பவர்கள் இந்த படிப்பை வைத்துக்கொண்டு சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

படிப்பது முக்கியமல்ல பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்பது சமுதாய கருத்து. படித்து முடித்துவிட்டு சம்பாதிக்க தானே போகிறார்கள். அது தான்.

ஆகவே இது ஜனநாயக நாடு தானே.