இயற்கை

இயற்கை நமக்கு ஒரு வரப்பிரசாதம். இயன்ற வரை மனிதகுலத்திற்கு நன்மையே செய்துக்கொண்டிருக்கும். இந்த இயற்கைகையை மனிதன் செயற்கை மூலமாக மாற்றம் செய்துகொண்டு தானும் கெட்டு மற்ற உயிரினங்கைளையும் கெடுத்துக்கொண்டிருக்கிறான்.

இயற்கையை மற்ற எந்த உயிரினமும் மாற்றம் செய்ய நினைக்கவில்லை ஆனால் மனிதன் மட்டும் தான் அதற்கு விதிவிலக்கு என்பது போல் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

மரங்கள் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிலிருந்து இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மருந்துகள் ஏராளம்.

மனிதர்கள் தான் இயற்கையை மாற்றி அமைக்கிறார்கள், அவர்களால் தான் இயற்கை அழிக்கப்படுகிறது என்பது தவறு.

ஆஸ்திரேலியாவில் முயல்கள் அந்த நாட்டின் புல்வளத்தை அழித்ததாக படித்திருப்போம்.

அது போல் இந்தியாவில் காட்டு யானைகள் வயல்களில் இறங்கி விவசாய நிலத்தை பாழ்படுத்தியதாகவும் பார்த்திருக்கிறோம். ( கும்கி திரைபடம்).

ஆக மனிதர் மட்டும் அல்ல சில விலங்குகளுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியே இருந்தாலும் மனிதர்கள் என்ன செயற்கையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக