விளையாட்டு குழந்தைகள்

விளையாட்டு இன்று இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனதும் உடலும் வலிமையாகும் என்பதனை மறந்துவிடுகிறார்கள்.

விளையாட்டில் தோல்வியை சந்தித்த குழந்தைகள் வாழ்க்கையில் சிற்சில தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் அடைவதாக இன்றைய விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

அந்த விளையாட்டு கணிணியில் விளையாடும் விளையாட்டோ அல்லது தொலைகாட்சியில் விளையாடும் விளையாட்டோ அல்ல.

களத்தில் இறங்கி விளையாடும் குழந்தைகள் வியர்வை வெளியேறி சோர்வடைந்து பின்பு ப்ரஷாக ஆவது. அவர்களது உடலையும் மனதையும் கட்டுப்பாக வைத்திருக்கும்.

2ஆம் உலக போரின் போது சாப்லின் ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அந்த போராட்டத்தின் வாக்கியமே குழந்தைகள் வீதியில் இறங்கி விளையாட முடியவில்லை. போரை நிறுத்துங்கள் என்பது தான்.

ஆக அவரின் எண்ணம் போர் அல்ல குழந்தைகள் வாழ்க்கையும், அவர்களது மனநலனும் பாதிக்க கூடாது என்பது தான்.

குழந்தைகள் வீட்டிற்குள்ளயே விளையாட விடாமல், வெளியில் போய் விளையாட அனுமதி கொடுத்தாலும். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முற்படுவதில்லை.

அந்தளவுக்கு இன்று எங்கு நோக்கினும் மாசு நிறைந்திருக்கிறது.

முதலில் மாசுபடும் உலகை காப்போம் என்றால்.
நீ யோக்கியமா என்று வார்த்தை வருகிறது அப்படியில்லை என்றால் கமல் நடித்த நாயகன் படத்தில் வருவது போல் அவனை நிறுத்த சொல் நான் நிறுத்திறேன் அப்படியும் வார்த்தை வருகிறது.

என்ன செய்ய.

குழந்தைகள் விளையாட ஓர் பசுமையான தூய்மையான இடம் இல்லை என்ற வருத்தம் தான்

குழந்தைகளை விளையாட அனுப்புவோம். கூடவே நாமும் விளையாடுவோம். விளையாட்டு மனிதனை மேம்படுத்துகிறது.
( கண்டிப்பாக வீடிகோகேம் அல்ல )

1 கருத்து:

  1. Please visit
    http://nidurseasons.blogspot.in/
    விளையாட்டு குழந்தைகள்
    அன்புள்ள நண்பருக்கு ,
    வாழ்த்துகள் .அருமையான கட்டுரை தந்துள்ளீர்கள் .இதனை நீடூர் சீசன்ஸ் பாருங்கள் .மயிலாடுதுறை மணிக்கூண்டு
    எனது தந்தையால் கட்டப்பட்டது
    http://nidurseasons.blogspot.in/2010/07/blog-post_7298.html
    http://seasonsnidur.wordpress.com/2009/12/12/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/

    பதிலளிநீக்கு