அச்சுக்கலை


தமிழ் பொதுவாகவே மூன்றாக பிரிக்கப்படுகிறது.
அது பின்வருமாறு

இயற்தமிழ் - இது இலக்கண, இலக்கியங்களுக்காகவும்
இசைதமிழ் - இசை மூலமாக தமிழ் வளர்ச்சிக்கும்
நாடக தமிழ் - இது நாடக கலையின் மூலம் தமிழ் வளச்சிக்குமா சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை பேப்படுகிறது.

இருந்தாலும் நவநாகரீக உலகத்தில் தமிழ் இணையம் மூலமாகவும், அச்சு காகிதம் மூலமாகவும் பரவி வருகிறது. அதற்காக இதனை நான்காம் தமிழ் என அழைக்கபடாது.

நவீன உலகின் புதிய முறை எனலாம்.

இந்த நவீன உலகில் இணையம் பிரபலமாக இருந்தாலும். அச்சு முறை தான் இன்னமும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.

ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த அச்சுகலை பணி செய்துக்கொண்டிருக்கிறது.

பாரதி சொன்னது போல் மற்ற நாட்டு கலையை இங்கு கொண்டு வந்து புதுமை படைப்பதில் இந்த அச்சு கலை அப்படியே இருக்கிறது.

போர்ச்சுகீசிய ஜான் கூட்டன் பர்க்கால் உருவாக்கபட்ட இந்த அச்சுகலை இன்று பல மாறுதலுகுட்பட்டு புதிய சகாப்தமாக, ஆப்செட் பிரிண்டிங், மல்டிகலர் பிரிண்ட்டிங், டிஜிட்டல் பிரிண்டிங் என அரிதாரம் பூசி அழகாக பவனி வருகிறது.

மாணவர்களுக்கான பாடநூல் முதல் பல அறிவுசார் விசயங்களை தனது அச்சின் மூலம் வெளிக்காட்டி தமிழை வளர்த்து வருகிறது.

பேச்சு வழக்கில் நாம் தமிழை பேசுவது குறைந்தாலும். இந்த அச்சிடப்பட்ட தமிழ் புத்தகங்களின் மூலமாகவும் நாம் தமிழை தமிழாக உச்சரிக்க வழிவகை செய்கிறது.

இந்த கலை தமிழ் வளர்ச்சிக்கு பெரிய படிக்கலாக இருந்தாலும்,

அச்சத்தார் தன் கடமையை கடைமையே என செய்யும் போதும், வியாபார போட்டிக்காக இந்த அருமையான கலையை குறைத்து மதிப்பிடுவதாலும், மக்கள் தமிழை முழுமையாக பயன்படுத்தாது பெருங்கவலை தான்.

இந்த கவலையுடன் அச்சுக்கலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

உலக பார்வைக்கு

கலிலியோ உலகம் உருண்டை என்று சொன்ன போது நம்பாத உலகம், அவரை கேலப்படுத்தி, அவமானபகடுத்தியது.

பிறகு உலகம் உருண்டை என்று நம்பும் போது பைபிளில் உள்ள வாசகம் தவறு என்று ஒப்புக்கொண்டது.

அறிவியல் பூர்வமான நிறுபிக்கட்ட அனைத்தையும் நம்பிய மனிதன், நிறுபிக்கபடாததை கடவுளின் கிருபை என்றும் கடவுளாகவும் கூட நம்பினான் நம்பிக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திற்கும் கூட புதுக்கடவுள் அவதாரம் என்று பெயர் வைத்துவிட்டான்.

அம்மை நோயை மாரியம்மனாகவும், காலரா நோயை காளியம்மனாகவும் நினைக்கும் மக்கள், நோய் வந்தால் மட்டும் பயந்து ஒதுங்குகிறார்கள்.

ஆக காலராவை ஒழித்துவிட்டதாக சொல்லும் மருத்துவர்கள்,
காளியம்மனை அழித்துவிட்டார்களா என்ன.

கடவுள் இருக்கிறார் என்றால் அவரை கண்டபடி வேறு எதனோடும் ஒப்பிட்டு கேவலப்படுத்தவேண்டாம்.

ஐசு, ஐசு....................

ஐஸ்வர்யா ராய் இது இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஓர் மந்திரவார்த்தையாக தான் இருந்தது.

இந்த பெயரை கேட்டாலே வடிவேலு ஒரு படத்தில் ஐஸவர்யாராய அம்மாவாக்கி அவங்க அம்மாவ மாமியாராக்கனும்னு சொல்ற காமடி தான் நினைவுக்கு வருகிறது.

இந்த படத்தை பார்த்தால் அதே வடிவேல் அந்த வார்த்தையை சொல்லியிருப்பாரா என்பது சந்தேகம் தான்...

ஆக மொத்தம் மனதை பார்த்து கல்யாணம் செய்வது என்ற நிலைப்பாடு காணாமல் போய்விட்டது.

முன்பெல்லாம் பெண்ணை மணமகனுக்கு கண்ணில் காட்டாமல் நல்ல மனசு பெண் என்றும் நல்ல அழகு என்றும் மணமகனின் தாயார் சொல்லி திருமணம் செய்தார்கள்.

இன்று அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.

என்றும் நிலையில்லாதது இந்த அழகு என்று தெரிவிப்பதற்கு இந்த ஐசே உதாரணம்,

உடல் பருமனாகிவிட்டது என்பதற்கு இது அழகு இல்லை என்று ஆகிவிடாது. இருந்தாலும் அந்த ஒல்லியாக தேகத்தையும், அந்த கண்ணையும் அழகு என்று சொன்னவர்கள், அந்த ஒல்லி தேகத்தை தேடவேண்டிய கால கட்டத்தில் உள்ளார்கள்.

ஆக புறஅழகுக்கு முக்கியத்துவம் தராமல் அகஅழகுக்கு முக்கியத்துவம் தாருங்கள்

தமிழர் நிலைப்பாடு.

நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) இது ஹிட்லரால் உருவாக்கப்பட்ட ஓர் சட்டம் இந்த சட்டதின் முக்கியாம்சமே ஜெர்மனி வாழ் யூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, அவர்கள் இரண்டாம் மூன்றாம் தர மக்களாகவோ மக்களாக இருக்க செய்தது. அவர்களுக்கு எந்த வித உரிமைகளும் இல்லை என்பதே ஆகும்.
இதன் மூலம் காவல்துறைக்கு யூதர்களை கொல்வதற்கு முழு அதிகாரம் கொடுத்தார். இந்த யூதர்களை கொல்வதற்கு இரண்டு படைபிரிவுகளையும், ஒரு அதிநவீன மற்றும் கொடூரமான சிறைச்சாலையை உருவாக்கினார்.
இசந்த சிறைச்சாலையின் விஷேசமே உணவு, தண்ணீர் கிடையாது, ஆனால் விஷஜந்துக்கள் தாராளம்.
அப்படி கஷ்டப்பட்ட இந்த யூதர்கள் இன்று உலகின் முதல் இடத்தில் இருக்கும் உறவுபிரிவுக்கு சொந்தகாரர்கள்.
இவர்களுக்கு ஒரு தனி நாடு. யாரும் போய் அவர்களிடம் வாலாட்ட முடியாது. 
தன் மக்களிடம் தவறாக நடந்த தலைவர்களை கடத்தி கொண்டு போய் தண்டனை கொடுத்த பெருமை கொண்ட நாடு. அது போல் உலகில் எந்த யூதர்களுக்காவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்கும் நாடு. யூதர்கள் சிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கிவருகிறது.



அது போலவே இலங்கையில் உள்ள தமிழ் மக்களை அழித்தொழிக்க ராசபட்சே அரசு தீவிர முயற்சியில் போர் பிரகடனம் செய்து.
தமிழ் மக்களை கொன்று வந்தது.  இந்த போரினால் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்க கூடாது எனவும் அவர்களது கலை பண்பாட்டை அழிப்பதன் மூலம். இனத்தை அழிப்பது அவர்களது குறிக்கோளாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் வீழ்ந்துவிட்டதாக இவர்களது நினைப்பு. இவ்வளவு கடினப்பட்டு இனமே இல்லை என நினைத்த யூதர்கள் முன்னேறும் போது தமிழர்கள்.....................
நினைவுக்கு,  டெசோ கூடிவிட்டது.

சரியான முடிவு

நாம வாழ்க்கையில எடுக்கற முடிவும் எடுக்கபோற முடிவும் சரியா தப்பா அப்படின்னு முடிவு பன்றதுக்குள்ள அந்த விசயம் முடிஞ்சி போயிடுது.

அப்ப எப்படி தான் சரியான முடிவு எடுக்கறது என்பது தான் முதல் கேள்வியா நம்மிடம் இருக்கும்.

இது ஒன்னும் பெரிய விசயம் இல்ல, நாம எடுக்கற முடிவு தப்பில்ல அப்படின்னு நினைச்சாலே அது சரியா தான் இருக்கும்.

ஆனாலும் சரி தவறு இரண்டும் பார்வைக்கு ஒன்னா தான் தெரியும். மேல உள்ள எழுத்த போல.  அத ஆராய்ச்சி நோக்கோடு பார்த்தா இனம் காணலாம்.

நாம எடுக்கற முடிவு சரியா இருக்கனும்னா அது

  •  உண்மையான முடிவா இருக்கனும்
  • நம்பிக்கையான முடிவா இருக்கனும்
  • தைரியமான முடிவா இருக்கனும்
இப்படி இருந்தா அது சரியான முடிவு தான்

சர்க்கஸ்காரர்கள்

கரணம் தப்பினால் மரணம் இது தமிழ் பழமொழி.

இன்று நாம் பலர் நம் வாழ்க்கையை இப்படி தான் நகர்த்திகொண்டிருக்கிறோம்.

ஆனாலும் மயிலாடுதுறையில் கூடாரம் அடித்திருக்கும் சர்க்கஸ்காரர்களை பார்த்தால் இது உண்மை என்று தெரியவரும்.

பிறரை சந்தோஷப்படுத்த தன் உயிரை பணயம் வைத்து விளையாடுகிறார்கள்.

அப்படிபட்ட சர்க்கஸ் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை தான்.
சினிமாவில் டூப் போட்டு சண்டை போடும் கதாநாயகர்களுக்கு கரகோஷம் எழுப்பி ரசிகர் மன்றம் வைக்கும் நாம் இவர்களை சட்டை செய்வதில்லை தான்.

பிறர் சந்தோஷத்திற்காக உடலை வருத்தி உழைக்கும் இவர்களை பாராட்டாமல் இருக்கலாமா

விளையாட்டு குழந்தைகள்

விளையாட்டு இன்று இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனதும் உடலும் வலிமையாகும் என்பதனை மறந்துவிடுகிறார்கள்.

விளையாட்டில் தோல்வியை சந்தித்த குழந்தைகள் வாழ்க்கையில் சிற்சில தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் அடைவதாக இன்றைய விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

அந்த விளையாட்டு கணிணியில் விளையாடும் விளையாட்டோ அல்லது தொலைகாட்சியில் விளையாடும் விளையாட்டோ அல்ல.

களத்தில் இறங்கி விளையாடும் குழந்தைகள் வியர்வை வெளியேறி சோர்வடைந்து பின்பு ப்ரஷாக ஆவது. அவர்களது உடலையும் மனதையும் கட்டுப்பாக வைத்திருக்கும்.

2ஆம் உலக போரின் போது சாப்லின் ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அந்த போராட்டத்தின் வாக்கியமே குழந்தைகள் வீதியில் இறங்கி விளையாட முடியவில்லை. போரை நிறுத்துங்கள் என்பது தான்.

ஆக அவரின் எண்ணம் போர் அல்ல குழந்தைகள் வாழ்க்கையும், அவர்களது மனநலனும் பாதிக்க கூடாது என்பது தான்.

குழந்தைகள் வீட்டிற்குள்ளயே விளையாட விடாமல், வெளியில் போய் விளையாட அனுமதி கொடுத்தாலும். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முற்படுவதில்லை.

அந்தளவுக்கு இன்று எங்கு நோக்கினும் மாசு நிறைந்திருக்கிறது.

முதலில் மாசுபடும் உலகை காப்போம் என்றால்.
நீ யோக்கியமா என்று வார்த்தை வருகிறது அப்படியில்லை என்றால் கமல் நடித்த நாயகன் படத்தில் வருவது போல் அவனை நிறுத்த சொல் நான் நிறுத்திறேன் அப்படியும் வார்த்தை வருகிறது.

என்ன செய்ய.

குழந்தைகள் விளையாட ஓர் பசுமையான தூய்மையான இடம் இல்லை என்ற வருத்தம் தான்

குழந்தைகளை விளையாட அனுப்புவோம். கூடவே நாமும் விளையாடுவோம். விளையாட்டு மனிதனை மேம்படுத்துகிறது.
( கண்டிப்பாக வீடிகோகேம் அல்ல )