ஜேசீஸின் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நான் மயிலாடுதுறையில் ஜேசீஸ் என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற தேர்தல் விழிப்பணர்வு பிரச்சாரத்திற்கு
திட்ட இயக்குனராக நான் அமர்த்தப்பட்டேன்.

             அந்த பிரச்சாரம் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டிருக்கும் மாதிரி வாக்குசாவடியில் இருந்து துண்டுபிரசுரங்கள் வெளியிட்டு கடைவீதி முழுமையும் தருவதாகவும். முடிந்தால் அந்த மாதிரி வாக்குசாவடியில் ஏதாவது பணி செய்யலாம் என்று தான் முடிவு செய்திருந்தோம்.
             
             ஆனால் எங்களால் துண்டு பிரசுரங்கள் மட்டும் தான் வெளியிட முடிந்தது.  அந்த துண்டு பிரசுரத்தில் கீழ்கண்ட வாசகங்கள் தான் இடம்பெற்றிருந்தது.

             வாக்காளர் என்பதில் பெருமைபடுவோம். நாம் வாக்களித்து கடமையாற்றுவோம்.   நமது எதிர்கால குரல், நமது வாக்கு அதை சரியாக பயன்படுத்துவோம்.    நாம் வாக்காளர் என்பதை அடையாளப்படுத்துவோம், வாக்களிக்க தயாராக இருப்போம்.    மனதில் உறுதிவேண்டும், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும்.  நோட்டுக்காக ஓட்டல்ல, ஓட்டை விற்காதீர்..
நமது வாக்கு நமது உரிமை.....




தமிழனின் கலை சிலம்பாட்டம்.

தமிழனின் அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இருக்கிறது சிலப்பமும், குத்து விளையாட்டும். சிலப்பம் பயிற்சி உடல்நலத்துடன் வாழ்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

இன்று இந்த சிலம்பம் விளையாட்டுக்கும், குத்துவரிசைக்கும் கற்றுதர ஆள்இல்லாமல் இருக்கிறது. இன்னும்சில

இதனால் எனது வர்மகலை ஆசான் ராஜேந்திரன் கிருஷ்ணராஜ்
திரு. https://www.facebook.com/rajendran.krishnaraj?fref=ts
அவர்கள் இந்த சிலம்பம், வர்மம், தஞ்சை குத்துவரிசை பிடிவரிசை போன்ற கலைகளை ஊக்கப்படுத்தவேண்டும்

அதனை முறையாக கற்று, பிறருக்கு கற்று தரும் ஆசான்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு அரசால் ஏதேனும் ஆதாயம் ஏற்படுத்தி தர முன்வரவேண்டும் என்று முன்பே கூறியிருந்தார்கள்.

அதன்பொருட்டு இந்த கலைகளில் சிலப்பம் மற்றும் குத்துவரிசை கற்றுதரும் ஆட்களை எங்கெங்கோ தேடி. இறுதியில் எனது ஊரான மயிலாடுதுறையின் அருகில் உள்ள கோடங்குடி- நெடுமருதூரில் ஒருவரை சந்தித்தேன்.

அவர் பெயர் செல்வராஜ், வயது 73, இவரிடம் தான் தற்போது சிலம்பமும், குத்து வரிசையும் கற்றுவருகிறேன்.

இவரும் இவரது துணைவியாரும் மிகவும் வருமையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஓர் பண்ணையில் தினகூலி வேலையில் இருக்கிறார்கள்.

இவர்கள் போல் இன்னமும் பல ஆசான்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம்.

என்னை போல் திருச்சி பாலா, பெங்களுர் மணிகண்டன், மணிகண்டா போன்றோர்கள்.

அதற்கு ஓர் தீர்வு அதாவது இந்த தமிழனின் கலைகள் அழியாமல் இருக்க அரசு இவர்களுக்கு ஊக்க தொகை கொடுத்து ஊக்கப்படுத்தி கௌரவிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி.

இவருடன் இந்த கலை அழியாமல் இருக்க கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இவரை தொடர்பு கொள்ளவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன். ஆசான் எண் 8870726154.

இவருடன் இந்த கலை அழியாமல் காப்போம்.
இதில் எனது புகைப்படமும், ஆசான் புகைப்படம் மற்றும் இவர் சிலம்பம் சுற்றும் காணொளியும் இணைத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=jJKIKPdDgj0

கிட்டி பில்லு

கில்லி அப்படின்னாலே நமக்கு விஜய் நடிச்ச படம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த கில்லி அழிஞ்சி்கிட்டு வர ஒரு விளையாட்டோட பெயர் அப்படின்னு நமக்கு தெரியாது.

இன்னம் கொஞ்ச நாள்ல 7ஆம்அறிவு படத்துல வர போதிதர்மனை பத்தி இந்திய மக்கள் கிட்ட பேட்டி எடுப்பாங்க அப்ப இந்த போதிதர்மனை பத்தி எத்தனை பேருக்கு தெரியும்னு ஒரு கேள்வி வரும். அது போல கிட்டிபில்ல பத்தி எத்தனை பேருக்கு தெரியும் அப்படின்னு பேட்டி எடுத்தாலும் எடுப்பாங்க ஏன்னா இது கிரிக்கெட்டுக்கு முன்னோடி.

கிட்டிபுல்லு இந்த விளையாட்டு எங்கிருந்து  வந்தது என்று தெரியவில்லை.
அனால் Lippa (gioco),என்று இத்தாலியில் இந்த விளையாட்டை போல அங்கு ஒரு விளையாட்டு பழக்கத்தில் உள்ளது .
இதற்கு தேவைப்படும் இரண்டு குச்சிகள் (தண்டா,கில்லி),தமிழ் நாட்டிற்கு இது அறிமுகம் தேவை இருக்காது .இதற்கு இவ்வளவு நபர் தான் விளையாட வேண்டும் என்று விதிகளும் கிடையாது.இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவிலும்,வடக்கில் பஞ்சாப்,பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்,போன்ற இடங்களில் அதிகம் விளையாடுகிறார்கள். தமிழகத்தில் கிராம புறங்களில் இது தான் தேசிய விளையாட்டு.ஆனால் கிட்டிபுல்லை அடிபடையாக வைத்தே baseball, cricket போன்ற விளையாட்டுகள் வந்திருக்ககூடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
நமக்கு தெரியாத செய்தி இதற்கு International championship tournaments நடத்தப்பட்டுள்ளன என்பது.ஐந்து முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி இருக்கின்றன.,மூன்றில் பாகிஸ்தானும் இரண்டு ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் சமமாக முடிந்துள்ளது.

விதிகள்
ஒரு ஒரு இடங்களில் இந்த விளையாட்டில் விதிகள் திருத்தி விளையாட படுகின்றன.பெரிய செலவு செய்து எதுவும் வாங்க தேவை இல்லை இரண்டு குச்சி செய்தால் இந்த விளையாட்டு ரெடி.அதுவும் சுவாரசியமான விளையாட்டு.

இதன் மற்ற மொழி பெயர்கள்:

கில்லி-தண்டா-தேவநாகரி.
டங்குளி - பங்களாதேஷ்.(பங்களா)
சின்னி-தண்டு-கர்நாடகா.(கன்னடா)
விட்டி-தண்டு-மகாராஷ்டிரா.(மராத்தி)
கிட்டிபுல்லு-தமிழ்.
கூட்டி-பில்லா-ஆந்திரா.(தெலுங்கு)
லப்ப-துக்கி-பஷ்டோ.

விளையாடப்படும் இடங்கள் :இந்தியா(குறிப்பாக தென் இந்தியா),பாகிஸ்தான்(பஞ்சாப்),இத்தாலி,அமெரிக்கா(பீ-வீ),பிலிப்பைன்ஸ்(சயடோங் )மற்றும் சில ஐரோபிய நாடுகள்.

நம்ம சச்சின் டோனி மாதிரி உள்ள கிட்டிபுல்லு "SUPERSTARS":

இந்தியா
வருன்,அஜய்,ரோகித்மிஸ்ரா(IIT,Bhuvaneshwar,மாணவர்),விஜய் சௌதரி,விவேக் பரன்வல்,உபேந்தர் குமார்,சந்தீப் பிரகாஷ் .
பாகிஸ்தான்:
நூர் கான்,அப்துல்ஹமீது, நதீம் ஜமீல்,அஸேம் சித்திகி

மெதுவாக மறந்து வரும் கிரிக்கெட்டிற்கு முன்னோடியான இந்த விளையாட்டை கிராமத்து இளையர்கள் தான் முற்றிலும் அழிந்து விடாமல் ஏதோ விளையாடி வருகிறார்கள்.


நன்றி - முகநூல்

இயற்கை

இயற்கை நமக்கு ஒரு வரப்பிரசாதம். இயன்ற வரை மனிதகுலத்திற்கு நன்மையே செய்துக்கொண்டிருக்கும். இந்த இயற்கைகையை மனிதன் செயற்கை மூலமாக மாற்றம் செய்துகொண்டு தானும் கெட்டு மற்ற உயிரினங்கைளையும் கெடுத்துக்கொண்டிருக்கிறான்.

இயற்கையை மற்ற எந்த உயிரினமும் மாற்றம் செய்ய நினைக்கவில்லை ஆனால் மனிதன் மட்டும் தான் அதற்கு விதிவிலக்கு என்பது போல் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

மரங்கள் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிலிருந்து இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மருந்துகள் ஏராளம்.

மனிதர்கள் தான் இயற்கையை மாற்றி அமைக்கிறார்கள், அவர்களால் தான் இயற்கை அழிக்கப்படுகிறது என்பது தவறு.

ஆஸ்திரேலியாவில் முயல்கள் அந்த நாட்டின் புல்வளத்தை அழித்ததாக படித்திருப்போம்.

அது போல் இந்தியாவில் காட்டு யானைகள் வயல்களில் இறங்கி விவசாய நிலத்தை பாழ்படுத்தியதாகவும் பார்த்திருக்கிறோம். ( கும்கி திரைபடம்).

ஆக மனிதர் மட்டும் அல்ல சில விலங்குகளுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியே இருந்தாலும் மனிதர்கள் என்ன செயற்கையா.

சம்பாபதி அம்மன்

 பூம்புகார் என்ற புராதான நகரை பற்றி  நாம் நினைத்தால் நமக்கு நினைவு வருவது சிலப்பதிகாரமும்,  கடற்கரையும்,  கலைகூடமும்  தான்.

பண்டைய தமிழகத்தின் கலாச்சாரமும், பண்பாடும், கட்டிடகலையும் கூட எச்சங்களாக இன்னமும் மிச்சம் இங்கு இருக்கின்றன இந்த புராதான நகரில் பழைய அடையாளங்கள் இன்னமும் தக்க வைத்துள்ளது.

2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தவிகாரை ஒன்று இங்கு அங்குள்ளது.

அது போல் கரிகாற்சோழன் காலத்து மடை ஒன்றும் இங்குள்ளது. இது நம் தமிழர்களின் கட்டிட மற்றும் பொறியியல் அறிவை அன்றே இந்த கட்டிடங்கள் வெளிபடுத்துகின்றன. 
( அந்த படங்கள் இதில் இல்லை ).

அது மட்டுமின்றி சிலப்பதிகாரத்தில் வரும் சம்பாபதியம்மன் ஆலயமும் இந்த பூம்புகார் அருகில் உள்ள சாயாவனம் எனும் ஊரில் தான் உள்ளது.

இந்த சம்பாபதி ஆலயத்தை பற்றி கூற வேண்டுமானால் இது ஒரு திராவிட கலாச்சாரத்தை இன்னமும் பறைசாற்றி கொண்டிருக்கும் ஒரு ஆலயமாக தான் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் இன்னமும் இந்த கோவிலுக்கு சமஸ்கிருத மந்திரமும், பிராமனியமும் நுழையாமல் இருக்கிறது.

ஆரியம் உள்ளே நுழையாத அந்த சிலப்பதிகார காலத்தில் கண்ணகிக்கும், மாதவிக்கும் குலதெய்வமாக இருந்தது இந்த சம்பாபதியம்மன் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

மணிமேகலை நூலில் மணிமேகலையை துரத்தி வந்த உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையையை மீட்ட தெய்வம் என்று இந்த தெய்வம் கூறப்படும்.

அப்படிப்பட்ட தெய்வம் இருக்கும்  இருந்த கோவில் இன்று சிதிலமடைந்து பாழடைந்து கிடக்கிறது. ஆனால் தற்போது அந்த அம்மன் இருப்பது என்னவோ அருகில் உள்ளஒரு குடி்சையில் தான். 

சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இந்த தெய்வத்தை பற்றி பல குறிப்புகள் உள்ளது.

அது மட்டுமின்றி சதுக்கபூதம் பற்றிய குறிப்புகளும் இந்த சிலப்பதிகாரத்தில் உள்ளது. அந்த சதுக்கபூதத்தின் சிற்பம் சற்றே சிதிலமடைந்தாலும் பார்க்க கம்பீரமான தோற்றத்துடன் காண்போரை வியப்படைய செய்யும் வண்ணம் இருக்கிறது.  அது மட்டுமின்றி பழந்தமிழர்களின் கலாச்சாரத்தை இன்னமும் பறைசாற்றும் விதமாக கம்பீரமாக இருக்கிறது.
இந்த கோவிலை பொறுத்தவரை கடவுள் இருக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை, ஆரியம் இன்னமும் நுழையாத திராவிட கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த கோலிலுக்கு பழம்பெருமை பேசும் நாம் என்ன செய்யபோகிறோம்.




இது என்னவோ

ஒரு பெண் ருதுவானால் செய்யப்படும் விழாவாம் இந்த விழா. 

வீட்டில் உள்ள பெரியோர்கள் தன் வீட்டில் உள்ள பெண் ருதுவாகிவிட்டால் என்று ஊரை கூட்டி வைக்கப்படும் விழாவாம் இது.

இதனால் அந்த பெண்ணுக்கு ஏதேனும் நன்மை நடக்க இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த விழாவால் அந்த பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படும். வாலிப வயது நபர்கள் அந்த பெண்ணை வட்டமிடுவார்கள். இதனால் சம்பந்தபட்ட பெண்ணின் பெற்றோர்கள் மனம் சஞ்சலம் அடையும். இது தான் இந்த விழாவால் நிகழக்கூடிய மிகப்பெரிய நன்மை என்று ஒரு பெரியவர் கூற கேட்டேன்.

அதனால் எனது அச்சகத்தில் இந்த புனித நீராட்டு விழா பத்திரிகை அடிக்க வந்த ஒருவரிடம் அந்த பெரியவர் சொன்னதை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவர் நான் பேசிய பேச்சில் பத்திரிகை அடிக்காமலேயே சென்று விட்டார். சரி இவரை நாம் பேசியே சரிசெய்துவிட்டோம். என்று ராஜதந்திரங்களை கரைத்து குடித்தவனடா நீ என்று எனக்கு நானே சபாஷ் சொன்ன போது தான் தெரிந்தது. அவர் எனக்கு அருகில் உள்ள அச்சகத்தில் இந்த பத்திரிகையை அடித்துக்கொண்டிருந்தது.

விளையும் பயிர்


படிப்பிற்கும், திறமைக்கும் வயது கிடையாது. எந்த வயதிலும் படிக்கலாம் எத்தனை வயதானாலும் படிக்கலாம் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் திறமையை வெளிக்காட்ட வயது முக்கியமா? முக்கியமில்லையா? என்று கேட்டால் அதற்கு மட்டும் பதில் இவர்களிடமிருந்து எளிதில் வராது. அப்படியே வந்தாலும் மிகப் பெரிய யோசனைக்கு பிறகு தான் பதிலே.


அப்படிப்பட்ட கேள்விக்கு இந்த படத்திலிருக்கும் சிறுவனே பதில்.
( தந்தையுடன் மகன்) 

மயிலாடுதுறையில் நடந்த ஓர் திருமண நிச்சயதார்த்த விழாவில் தவில் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் எட்டு வயதே ஆன மகன்
திரு. முத்துகுமார் (எ) சரத் வாசித்த தவில் கச்சேரி தான் வெகுவிமர்சை. 
திருமண நிச்சயத விழாவிற்கு  வந்திருந்த விருந்தினர்கள். இந்த மணமக்களை பார்த்தார்களோ இல்லையோ இந்த சிறுவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். இந்த விழாவில் விழாநாயகனாக விளங்கிய முத்துக்குமாரை பார்த்தாலே தெரியும். திறமைக்கு வயது முக்கியமா? முக்கியமில்லையா? என்று.

இனி சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் சிறுவர்களிடம் சைக்கிள் உயரமே இல்லை நீ எப்படி கற்றுக்கொள்முடியும் என்று யாரும் கேட்க முடியாது. 
ஏனென்றால் தவில் எடையே இல்லாத ஒருவன் தவில் வாசிக்கும் போது நான் சைக்கிள் உயரம் இருந்தால் தான் ஓட்டமுடியுமா என் எதிர் கேள்வி கேட்டாலும் கேட்பர்.