சரியான முடிவு

நாம வாழ்க்கையில எடுக்கற முடிவும் எடுக்கபோற முடிவும் சரியா தப்பா அப்படின்னு முடிவு பன்றதுக்குள்ள அந்த விசயம் முடிஞ்சி போயிடுது.

அப்ப எப்படி தான் சரியான முடிவு எடுக்கறது என்பது தான் முதல் கேள்வியா நம்மிடம் இருக்கும்.

இது ஒன்னும் பெரிய விசயம் இல்ல, நாம எடுக்கற முடிவு தப்பில்ல அப்படின்னு நினைச்சாலே அது சரியா தான் இருக்கும்.

ஆனாலும் சரி தவறு இரண்டும் பார்வைக்கு ஒன்னா தான் தெரியும். மேல உள்ள எழுத்த போல.  அத ஆராய்ச்சி நோக்கோடு பார்த்தா இனம் காணலாம்.

நாம எடுக்கற முடிவு சரியா இருக்கனும்னா அது

  •  உண்மையான முடிவா இருக்கனும்
  • நம்பிக்கையான முடிவா இருக்கனும்
  • தைரியமான முடிவா இருக்கனும்
இப்படி இருந்தா அது சரியான முடிவு தான்

சர்க்கஸ்காரர்கள்

கரணம் தப்பினால் மரணம் இது தமிழ் பழமொழி.

இன்று நாம் பலர் நம் வாழ்க்கையை இப்படி தான் நகர்த்திகொண்டிருக்கிறோம்.

ஆனாலும் மயிலாடுதுறையில் கூடாரம் அடித்திருக்கும் சர்க்கஸ்காரர்களை பார்த்தால் இது உண்மை என்று தெரியவரும்.

பிறரை சந்தோஷப்படுத்த தன் உயிரை பணயம் வைத்து விளையாடுகிறார்கள்.

அப்படிபட்ட சர்க்கஸ் கலைஞர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை தான்.
சினிமாவில் டூப் போட்டு சண்டை போடும் கதாநாயகர்களுக்கு கரகோஷம் எழுப்பி ரசிகர் மன்றம் வைக்கும் நாம் இவர்களை சட்டை செய்வதில்லை தான்.

பிறர் சந்தோஷத்திற்காக உடலை வருத்தி உழைக்கும் இவர்களை பாராட்டாமல் இருக்கலாமா

விளையாட்டு குழந்தைகள்

விளையாட்டு இன்று இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனதும் உடலும் வலிமையாகும் என்பதனை மறந்துவிடுகிறார்கள்.

விளையாட்டில் தோல்வியை சந்தித்த குழந்தைகள் வாழ்க்கையில் சிற்சில தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் அடைவதாக இன்றைய விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

அந்த விளையாட்டு கணிணியில் விளையாடும் விளையாட்டோ அல்லது தொலைகாட்சியில் விளையாடும் விளையாட்டோ அல்ல.

களத்தில் இறங்கி விளையாடும் குழந்தைகள் வியர்வை வெளியேறி சோர்வடைந்து பின்பு ப்ரஷாக ஆவது. அவர்களது உடலையும் மனதையும் கட்டுப்பாக வைத்திருக்கும்.

2ஆம் உலக போரின் போது சாப்லின் ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அந்த போராட்டத்தின் வாக்கியமே குழந்தைகள் வீதியில் இறங்கி விளையாட முடியவில்லை. போரை நிறுத்துங்கள் என்பது தான்.

ஆக அவரின் எண்ணம் போர் அல்ல குழந்தைகள் வாழ்க்கையும், அவர்களது மனநலனும் பாதிக்க கூடாது என்பது தான்.

குழந்தைகள் வீட்டிற்குள்ளயே விளையாட விடாமல், வெளியில் போய் விளையாட அனுமதி கொடுத்தாலும். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முற்படுவதில்லை.

அந்தளவுக்கு இன்று எங்கு நோக்கினும் மாசு நிறைந்திருக்கிறது.

முதலில் மாசுபடும் உலகை காப்போம் என்றால்.
நீ யோக்கியமா என்று வார்த்தை வருகிறது அப்படியில்லை என்றால் கமல் நடித்த நாயகன் படத்தில் வருவது போல் அவனை நிறுத்த சொல் நான் நிறுத்திறேன் அப்படியும் வார்த்தை வருகிறது.

என்ன செய்ய.

குழந்தைகள் விளையாட ஓர் பசுமையான தூய்மையான இடம் இல்லை என்ற வருத்தம் தான்

குழந்தைகளை விளையாட அனுப்புவோம். கூடவே நாமும் விளையாடுவோம். விளையாட்டு மனிதனை மேம்படுத்துகிறது.
( கண்டிப்பாக வீடிகோகேம் அல்ல )

வயிற்றெறிச்சல்


நெருப்பையும் பகையையும் மிச்சம் வைக்க கூடாது என்று சொன்ன துக்ளக் சோ போன்றவர்களுக்கு.
கலைஞர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாத்ததை பார்த்து வயிற்றெறிச்சலாக தான் இருந்திருக்கும்.
இருக்காதா பின்ன பகையாளி ஒருவர் இப்படி வாழ்கிறார் அவர் பிறந்தநாளை மக்கள் ஏதோ பண்டிகையை போல கொண்டாடுகிறார்கள் என்றால்.
அப்படி வயிற்றெறிச்சல் கொண்டவர்களுக்கு ஜெலுசில் ஒரு அருமருந்து
சாப்பிடுங்கள். அப்படியும் இல்லை என்றால் மயிலாடுதுறை நகர கழகத்தின் நீர்மோர். வாருங்கள் பிறந்தநாள் ஸ்பெசல்