அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

இன்னைக்கி இருக்கிற கான்கிரீட் காட்டுக்குள்ள பலதரப்பட்ட விலங்குகளின் குணம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் சிங்கம், புலி, நாய், பாம்பு, குரங்கு போன்ற விலங்குள் இருந்தாலும் இதில் யார் எந்த விலங்கு என்று கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக தான் இருந்தது. 

இதில் தனித்து இருந்தாலும் கம்பீரமாகவும்,  கௌரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிங்கம் போன்ற ஆட்கள். ( ஏன்னா சிங்கம் சிங்கிளா தான வரும்.)

சந்தர்ப சூழ்நிலைக்காக காத்திருந்து பாயவேண்டிய நிலை வரும்போது பாயும் மக்களும் இருக்காங்க இவர்கள் புலியை போல குணம் உள்ள மக்கள். (புலி பதுங்கி பாயும்)

இது எனது ஏரியா இது என்னுடையது என்று தனக்கென ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கி அதிலேயே வாழ்பவர்கள் இவர்கள நாய் குண மக்கள்

தனக்கு கெடுதல் செய்தால் கெடுதல் செய்யும் மக்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள மக்கள் பாம்பு போன்ற குணம் உள்ள மக்கள்.

இப்படி இருக்கும் போது குரங்கு போன்ற குணம் உள்ள மக்கள் என்றால் யாரை சொல்வது. மனம் ஓர் குரங்கு அது அங்குமெங்கும் அலைபாயும் என்று சொன்னால் அது மனதை பற்றிய விசயம். அப்படி என்றால் யாராக இருக்கும் என்று சொன்னால்...........

சரியான கொள்கை இல்லாமல் மரத்திற்கு மரம் தாவுவது போலவும்,  இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி மக்களை மயக்கி வாங்குவதை வாங்கி விட்டு அடுத்த ஒன்ற வாங்க தாவுகின்றரை தான் சொல்லவேண்டும். அப்படி பட்ட ஆள் யாராக இருப்பர் என்பது உங்கள் சிந்தனை வசம்.

இது என்னவோ

ஒரு பெண் ருதுவானால் செய்யப்படும் விழாவாம் இந்த விழா. 

வீட்டில் உள்ள பெரியோர்கள் தன் வீட்டில் உள்ள பெண் ருதுவாகிவிட்டால் என்று ஊரை கூட்டி வைக்கப்படும் விழாவாம் இது.

இதனால் அந்த பெண்ணுக்கு ஏதேனும் நன்மை நடக்க இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த விழாவால் அந்த பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படும். வாலிப வயது நபர்கள் அந்த பெண்ணை வட்டமிடுவார்கள். இதனால் சம்பந்தபட்ட பெண்ணின் பெற்றோர்கள் மனம் சஞ்சலம் அடையும். இது தான் இந்த விழாவால் நிகழக்கூடிய மிகப்பெரிய நன்மை என்று ஒரு பெரியவர் கூற கேட்டேன்.

அதனால் எனது அச்சகத்தில் இந்த புனித நீராட்டு விழா பத்திரிகை அடிக்க வந்த ஒருவரிடம் அந்த பெரியவர் சொன்னதை சொல்லிக்கொண்டிருந்தேன். 

அவர் நான் பேசிய பேச்சில் பத்திரிகை அடிக்காமலேயே சென்று விட்டார். சரி இவரை நாம் பேசியே சரிசெய்துவிட்டோம். என்று ராஜதந்திரங்களை கரைத்து குடித்தவனடா நீ என்று எனக்கு நானே சபாஷ் சொன்ன போது தான் தெரிந்தது. அவர் எனக்கு அருகில் உள்ள அச்சகத்தில் இந்த பத்திரிகையை அடித்துக்கொண்டிருந்தது.