அச்சுக்கலை


தமிழ் பொதுவாகவே மூன்றாக பிரிக்கப்படுகிறது.
அது பின்வருமாறு

இயற்தமிழ் - இது இலக்கண, இலக்கியங்களுக்காகவும்
இசைதமிழ் - இசை மூலமாக தமிழ் வளர்ச்சிக்கும்
நாடக தமிழ் - இது நாடக கலையின் மூலம் தமிழ் வளச்சிக்குமா சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை பேப்படுகிறது.

இருந்தாலும் நவநாகரீக உலகத்தில் தமிழ் இணையம் மூலமாகவும், அச்சு காகிதம் மூலமாகவும் பரவி வருகிறது. அதற்காக இதனை நான்காம் தமிழ் என அழைக்கபடாது.

நவீன உலகின் புதிய முறை எனலாம்.

இந்த நவீன உலகில் இணையம் பிரபலமாக இருந்தாலும். அச்சு முறை தான் இன்னமும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.

ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த அச்சுகலை பணி செய்துக்கொண்டிருக்கிறது.

பாரதி சொன்னது போல் மற்ற நாட்டு கலையை இங்கு கொண்டு வந்து புதுமை படைப்பதில் இந்த அச்சு கலை அப்படியே இருக்கிறது.

போர்ச்சுகீசிய ஜான் கூட்டன் பர்க்கால் உருவாக்கபட்ட இந்த அச்சுகலை இன்று பல மாறுதலுகுட்பட்டு புதிய சகாப்தமாக, ஆப்செட் பிரிண்டிங், மல்டிகலர் பிரிண்ட்டிங், டிஜிட்டல் பிரிண்டிங் என அரிதாரம் பூசி அழகாக பவனி வருகிறது.

மாணவர்களுக்கான பாடநூல் முதல் பல அறிவுசார் விசயங்களை தனது அச்சின் மூலம் வெளிக்காட்டி தமிழை வளர்த்து வருகிறது.

பேச்சு வழக்கில் நாம் தமிழை பேசுவது குறைந்தாலும். இந்த அச்சிடப்பட்ட தமிழ் புத்தகங்களின் மூலமாகவும் நாம் தமிழை தமிழாக உச்சரிக்க வழிவகை செய்கிறது.

இந்த கலை தமிழ் வளர்ச்சிக்கு பெரிய படிக்கலாக இருந்தாலும்,

அச்சத்தார் தன் கடமையை கடைமையே என செய்யும் போதும், வியாபார போட்டிக்காக இந்த அருமையான கலையை குறைத்து மதிப்பிடுவதாலும், மக்கள் தமிழை முழுமையாக பயன்படுத்தாது பெருங்கவலை தான்.

இந்த கவலையுடன் அச்சுக்கலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக