தமிழ்

தமிழ் நம் தாய் மொழியாக இருந்தாலும், அதை இன்றளவும் நாம் முழுவதுமாக பயன்படுத்துகிறோமா என்னால் இல்லை,

தமிழில் அருமையான அர்த்தங்களும் வார்த்தைகளும் இருந்தும், வேற்று மொழிக்கு தாவுகிறோம், வார்த்தைகளை அங்கு தேடுகிறோம்.

ஆக்சுவலா என்று உச்சரிக்காத குழந்தைகளே இன்று இல்லை, தாய், தகப்பனை டாடி மம்மி என்று அழைக்கும் காலம் தான் இருக்கிறது.

அம்மா என்று குழந்தைகள் அழைக்கும் போது “அ” என்ற எழுத்தும் “ம்” என்ற எழுத்தும் சேர்த்து உச்சரிப்பதால் குழந்தைகள் மூச்சை இழுத்து தம் கட்டி சொல்கின்றன இதனால் குழந்தைகளின் நுரையீரல் வலுபடுகிறது.

குழந்தைகள் அப்பா என்று அழைக்கும் போது வயிற்றில் உள்ள பிரச்சிகைள் நீங்குகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

குழந்தை பிறக்கும் போது உந்தி தான் பிறக்கிறது. அது முதல் உந்து அதாவது முதல் பிறப்பு என்றும், நோயினால் பாதிக்கப்படும் போது அதை நீக்க உட்கொள்ளப்படும் மருந்து, அதாவது மருஉந்து மறுபிறப்பு என்றும் கூறுகிறார்கள்.

மருந்து உட்கொண்டு நோயிலிருந்து விடுபட உதவுவது தான் மருந்து ஆகையால் அதை மறுபிறவி மருந்து என்கிறது. தமிழ் இது போல் பல அர்த்தங்கள் உள்ளது தமிழில்.

தமிழில் எழுதப்படாத மருத்துவ, வானியல், கணித மற்றும் வியாபார யுத்திகள் வேறு எந்த மொழியிலும் இல்லை.

ஏற்கனவே தமிழுடன் சமஸ்கிரம் கலந்து மலையாளமாக மாறியது, அது போல் இன்று தமிழுடன் ஆங்கிலம் கலந்து ஓர் புது மொழியாக மாறாமல் பார்த்துக்கொள்வோம்.

பிறகு அவர்கள் மொழிவாரி மாநிலம் கேட்பார்கள், ஜாக்கிரதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக